ஊருக்கு சொல்ல

வைரத்தையும் பொடியாக்குமாம் பிரண்டை சாறு!

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை பிரண்டை சாற்றுக்கு உண்டு!

-போகர்-

முழங்கால்  வலியில் அவதிப்படுபவரா நீங்கள்

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுங்கள், மூன்றே வாரங்களுக்குள் வலி சுத்தமாக போய்விடும் என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் போய்விடும் என்கிறார்கள்.

முன்னைய காலங்களில் கிராமங்களில் மக்கள் கால் வலியை போக்க பிரண்டை, மல்லித்தலை, தூதுவளை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து உண்பார்கள்.

பிரண்டையில் அப்படி என்ன இருக்கிறது

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான் அதன் அதிசயம். எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்களுக்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் குறிப்பிட்டதை நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் கலந்து தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் அல்லது உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும். பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்தாகும்.

கால்சியம் மாத்திரைகளை பயன்படுத்தி சிறுநீரகத்தை பாழ் பண்ணனுவதை விடவும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பிரண்டையால் பயன்பெறுவோம்.

இதற்கு மற்றொரு பெயர் “வஜ்ஜிரவல்லி” தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் அப்பெயரால் அழைக்கப்படுகிறது.

This Post Has 2 Comments

  1. 22betapk

    Downloaded the 22betapk app. So far, seems pretty smooth. A lot more convenient for playing on the move. Check them out 22betapk and play anywhere!

Leave a Reply